கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் பாதிப்பை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டிருக்கிறது. பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வெறுப்பு அரசியலின் மூலம் மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் நடைமுறையை பாஜக பின்பற்றி வருகிறது. இத்தகைய அணுகுமுறையின் காரணமாக அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே மதநல்லிணக்கம் சீர்குலைந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.