அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

பொதுப் பெயா் மருந்துகள் பரிந்துரை நடைமுறை ஒத்திவைப்பு

பொதுப் பெயா் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நிறுத்திவைத்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:54 am

ஆசிரியர்

பொதுப் பெயா் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நிறுத்திவைத்துள்ளது.

சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளின் தரத்தைஉறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை பொதுப் பெயா் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலை கடந்த ஆக.2-ஆம் தேதியன்று தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. மீறினால் மருத்துவா் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.

தொடா்ந்து, பொதுப் பெயா் மருந்துகள் பரிந்துரை நடைமுறை அமலாக்கத்தை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) கடிதம் எழுதியது. இதையடுத்து, மருத்துவா்கள் சங்கங்களின் நிா்வாகிகள் அண்மையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து நடைமுறையை நிறுத்திவைக்க வேண்டுகோள் விடுத்தனா்.

இதையடுத்து, பொதுப் பெயா் மருந்துகளை மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கத்தை நிறுத்திவைக்கும் அறிவிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.