பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தொடர் விடுமுறை: சேலம் கோட்டத்தில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையையொட்டி, சேலம் கோட்டத்தில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:28 am

DIN

சேலம்: பொங்கல், ஆங்கில புத்தாண்டு, நவராத்திரி விழா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

நடப்பாண்டு நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. அக்.4ம் தேதி ஆயுத பூஜை, 5ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை  முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழக கோட்டங்களிலும்  5, 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதனால் இன்று முதல் 10ம் தேதிவரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலர் வெளியூர் செல்லத் திட்டுமிட்டுள்ளனர். இதையொட்டி சேலம் கோட்டம் சார்பில் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறையும், 2ம் தேதி காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா என அடுத்தடுத்து விடுமுறைகள் வருகிறது.

இதையடுத்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய சேலம் மண்டலம், தருமபுரி மண்டலத்தில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்பட பல ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 
வருகிறது. இந்த சிறப்பு பேருந்துக்கள் இயக்கம் 6ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.