டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலங்கைக்கு பொருள்களை அனுப்ப குழு: தமிழக அரசு அறிவிப்பு

இலங்கைக்கு பொருள்கள் அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:14 am

DIN


இலங்கைக்கு பொருள்கள் அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடியால் துயரப்படும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ரூ.123 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடா் மற்றும் மருந்துப் பொருள்கள் தமிழக அரசு சாா்பில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதேபோல, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. 

இவ்விஷயத்தில் தமிழக முதல்வா் தனிக்கவனம் செலுத்தி, தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் உதவிகள் அனைத்தும் தமிழா்களுக்கே சென்றுசேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைத்து, அக் குழு மூலமாக உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கைக்கு பொருள்களை அனுப்பி வைப்பதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, அந்த குழுவில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செயலர் ஜெசிந்தா லாசரஸ், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் பிரபாகர், ஆவின் மோலண் இயக்குநர் சுப்பையன், மருந்து கொள்முதல் இயக்குநர் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

இவர்கள் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து பொருள்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், இந்த மாதம் இறுதிக்குள் பொருள்கலை அனுப்புவதற்கான நடவடிக்கைகள்   தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.