ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கரோனா நிலவரம்: புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் நல்ல செய்தி

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதிதாக கரோனா நோயாளிகள் பதிவாகாத நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவரும் குணமடைந்ததால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்யமாகியுள்ளது.

News image

கரோனா நிலவரம்: புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் நல்ல செய்தி

Updated On :31 மார்ச் 2022, 9:50 am


புதுச்சேரி:  யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதிதாக கரோனா நோயாளிகள் பதிவாகாத நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவரும் குணமடைந்ததால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்யமாகியுள்ளது.

இதன் மூலம், புதுச்சேரி கரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்ட அறிக்கையில், 

வியாழக்கிழமை காலை 10 மணியுடன் முடியும் 24 மணி நேரத்தில் நான்கு மண்டலங்களிலும் ஒரு புதிய பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை. ஏற்கனவே கரோனா பாதித்திருந்தவரும் குணமடைந்துவிட்டதால், கரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகியுளள்து. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் மொத்தம் 212 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் கரோனா பாதிப்பு பூஜ்யமாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும், இன்றைய நிலவரப்படி, புதுச்சேரி கரோனா இல்லாத பகுதியாக மாறியிருப்பதாகக் கூற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.