அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சுதந்திர நாள்: திருச்சி மேயர் தேசியக் கொடியேற்றினார்

திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

News image
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:04 am

DIN

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர். இரா. வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் சிறப்பாக 25 ஆண்டுகள் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையே ரூ.15,000, ரூ.10,000 , ரூ.5,000 ரொக்கம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு ரூ. 15,000 ரொக்கமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மேயர் வழங்கினார்.  

மேலும், மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு கெளரவித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.