2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருவாரூரில் கொடிக் கம்பம் சேதம்: காவல்துறை விசாரணை

திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News image
திருவாரூரில் சேதமடைந்த கொடிக் கம்பம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:04 am

DIN

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுதல் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றுதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அம்ரித்சரோவர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் புதிதாக அமைக்கப்பட்டு அந்த குளத்தின் ஓரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் தேசிய கொடிக் கம்பம் அமைத்து சுதந்திர விழாவில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து குளங்களின் ஓரங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதியதாக கொடி மேடை மற்றும் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.  திங்கள்கிழமை காலை கொடியேற்றுவதற்காக அந்த பகுதிக்குச் சென்ற அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் கொடி மேடை உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டனர். இதையடுத்து திருவாரூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் அருகில் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.