/

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மரப்பெட்டி: போலீஸார் விசாரணை

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கியுள்ள மரப் பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
மர்மப் பெட்டி
Updated On :27 ஜனவரி 2024, 4:02 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கியுள்ள மரப் பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக் குளம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில்  மரப் பெட்டியொன்று கரை ஒதுங்கியிருப்பது தெரிய வந்தது.

சுமார் 3 அடி நீளம், சுமார் 1 1/2 அடி அகலத்தில் காணப்படும் பெட்டியின் உள்புறம் 12 அறைகளாக உள்ளது.

இதில்,11 அறைகளில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பவுடர் போன்ற பொருள் நிரப்பப்பட்டுள்ளது.

Story image

இந்த பொருள் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.