தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்

மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொது தொழிலாளர் துறை, தொ.மு.ச சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
வேலை நிறுத்தம்
Updated On :27 ஜனவரி 2024, 3:24 pm

எம்.ராஜசேகர்

மணப்பாறை : மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொது தொழிலாளர் துறை, தொ.மு.ச சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தியா முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது, இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை – அலகு II-ன் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொழிலாளர் விரோதச் சட்டத்தை கைவிட வேண்டும், அத்தியாவசியப் பொருட்களை பொது விநியோகத் திட்டத்தில் வழங்கிட வேண்டும், ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை முன்பு பொது தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தொமுச தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.