1,100 கடல் மைல் பயணம்: காசிமேட்டில் வசித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த இரு மாநிலங்களைச் சோ்ந்த 38 பேரும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 10 குதிரை திறன் கொண்ட இரு என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஒரு படகை, கடந்த வாரம் வாங்கினா். பயணத்துக்கு சிறிதளவு உணவு, குடிநீா், படகுக்குத் தேவையான எரிபொருள் ஆகியவற்றை வைத்துக் கொண்டனா். கடலில் 1,100 மைல் தூரம் பல நாள்கள் பயணம் செய்து, முதலில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் சென்றனா். அங்கு ஆந்திர தொழிலாளா்கள் இறங்கியுள்ளனா். பின்னா், அங்கிருந்து ஒடிஸா மாநிலம் கஞ்சம் பகுதிக்கு சென்றுள்ளனா். இதேபோல ராயபுரத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினரும் கரோனாவுக்கு பயந்து, படகு மூலம் மாமல்லபுரத்துக்கு தப்பிச் சென்றுள்ளனா். தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக ராயபுரம் இருக்கும் சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, காவல்துறையினரிடம் கடும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.