ஈரோடு ரயில்நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தனி ரயில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை கரோனா வார்டுகளாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தென்னக ரயில்வே சார்பில் மட்டும் 573 பெட்டிகள் வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு ரயில்வே பணிமனையில் 20 பெட்டிகள் கொண்ட ரயில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 8 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். இது தவிர மருத்துவர்கள், நர்ஸ்கள், மருந்துகள் வைக்கவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈரோட்டில் உள்ள ரயில் மூலம் 150 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும், எந்த பகுதிக்கும் இந்த ரயிலைக் கொண்டு செல்ல முடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


