சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கிணற்றில் விழுந்து மரணம்.. சுஜித் குடும்பத்தை தொடரும் துயரும்

குழந்தை சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தமிழகத்தை விட்டு அகலாத நிலையில், சுஜித் குடும்பத்தில் கிணற்றில் விழுந்து மரணிக்கும் சம்பவம் இது இரண்டாவது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:34 am

ENS


திருச்சி: குழந்தை சுஜித்தின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தமிழகத்தை விட்டு அகலாத நிலையில், சுஜித் குடும்பத்தில் கிணற்றில் விழுந்து மரணிக்கும் சம்பவம் இது இரண்டாவது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பிரிட்டோ குடும்பத்தில் கிணற்றில் விழுந்து ஏற்கனவே உறவினர் மரணித்த சில மாதங்களிலேயே சுஜித்தின் மரணமும் நிகழ்ந்துள்ளதுதான் வேதனை.

சுஜித்தின் மாமா ஜான் பீட்டர். ராணுவத்தில் பணியாற்றி வந்த ஜான், ஆண்டு விடுப்பில் கடந்த ஜூன் மாதம் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்திருந்த போது, கிணற்றில் விழுந்த கோழியைக் காப்பாற்ற முயற்சித்து, கிணற்றில் விழுந்து பலியானார்.

Story image

ராணுவத்தில் பணியாற்றியதால் எளிதாக எதிலும் ஏற இறங்கும் துணிச்சலுடன், வெளியில் இருந்து எந்த உதவியும் இல்லாமல், ஒரே ஒரு கயிறை மட்டும் பிடித்துக் கொண்டு கிணற்றில் இறங்கியிருக்கிறார் ஜான். கிணற்றில் இருந்த கோழியை மீட்டு மேலே கொண்டு வந்த போது துரதிருஷ்டவசமாக கயிறு அறுந்து, தண்ணீர் இன்றி வறண்டு இருந்த கிணற்றில் இருந்த கல் மீது ஜான் விழுந்தார். தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார்.

அதன்பிறகு, அந்த கிணற்றை வேலி போட்டு மூடிய குடும்பத்தினர், யாரையும் அந்த கிணற்றுப் பக்கம் போக விடாமல் தடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.