டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்தியாவிலே முதல்முறையாக தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு! எங்கு தெரியுமா?

மகப்பேறு நலச்சட்டத்தின்படி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:24 am

Muthumari

மகப்பேறு நலச்சட்டத்தின்படி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பேராசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் கேரள அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்று, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசு முடிவு செய்து அதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், கேரள அரசின் இந்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்படி, கேரளாவில் அரசு ஊழியர்கள் மட்டுமில்லாது தனியார் பள்ளி ஆசிரியைகள், தனியார் கல்லூரி பேராசிரியைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவன அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூபாய் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் நடைமுறை இந்தியாவிலே முதல் முறையாக  கேரள மாநிலத்தில் தான் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.