நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்துடன் ஹோட்டல் போக வேண்டுமென்றால் மாத பட்ஜெட்டை இரண்டு, மூன்று முறை புரட்டிப் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. அதேபோல, கிராமத்திலிருந்து மெட்ரோ சிட்டிக்கு வரும் பேச்சுலர்கள், முதலில் யோசிப்பது சாப்பாட்டைப் பற்றித்தான். தினசரி உயரும் பெட்ரோல், டீசல் விலை. அச்சுறுத்தும் ஜி.எஸ்.டி வரி போன்றவற்றுக்கு மத்தியில், குடும்பத்துடன் அவுட்டிங் செல்வது என்பது எப்போதாவது நடக்கும் அதிசயம்தான்.
அம்மா உணவகம் வந்த பிறகு, தமிழகத்தில் பல ஏழைகளின் மனதும், வயிறும் நிரம்பியது. ஆனால், கோவையில் அம்மா உணவகத்துக்கு முன்பிருந்தே, அந்தச் சமூகப் பணியைச் செய்து வருகிறது. சாந்தி சமூக சேவை நிறுவனம் (Shanthi Social Services). தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி ஷோஷியல் சர்வீசஸ் கேன்டீன். அதே நேரத்தில், சாந்தி கியர்ஸின் விலைக்குத் தமிழகத்தில் தரமான உணவுகளை எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது உண்மையோ உண்மை. ரூ.25-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்தாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் மூன்று இலக்கத்தைத் தொடாது. இதனால், சாந்தி கியர்ஸ் நிறுவனம் உள்ள சிங்காநல்லூர் பகுதியை நோக்கி ஏராளமான இளைஞர்கள் குடியேறியுள்ளனர்.
மத்திய அரசு, கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்திய போது, மற்ற உயர்தர உணவகங்கள் எல்லாம் அதை அப்படியே வாடிக்கையாளர்கள் மீது சுமத்தவே, சாந்தி கியர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஜி.எஸ்.டி வரியை தாங்களே செலுத்தி பேரன்பு காட்டியது. புதிய இந்தியாவில் பல புரட்சிகள் நடந்தும் சாந்தி கியர்ஸ் நிறுவனம் தனது விலையை மாற்றாமல்தான் இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது விலையை மாற்றியுள்ளது. அதிர்ச்சியடையாமல் தொடருங்கள். அதாவது, ரூ.25-க்குக் கொடுத்து வந்த முழுச் சாப்பாட்டை, ரூ.10-க்கு மாற்றி மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் சாந்தி கியர்ஸ் நிர்வாகத்தினர். மேலும், டிபன் வகைகள் அனைத்துமே ரூ.5-க்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த தை 1 முதல் முழுச் சாப்பாட்டின் விலையையும், தை 2-ம் தேதி முதல் டிபன் வகைகளிலும் இந்த அதிரடி விலை மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பிரியாணி, ஒரு சப்பாத்தி செட், ஒரு பூரி செட், ஒரு உளுந்தை வடை, ஒரு பில்டர் காபி சாப்பிட்டவருக்கு வந்த பில் ரூ.25 மட்டுமே.
ஆனால், கோவையில் உள்ள மற்ற உயர்தர உணவகங்களில் பில்டர் காபிக்கே இந்தத் தொகை வந்துவிடும். இதையடுத்து, சாந்தி கியர்ஸ் நிர்வாகத்தின் முடிவுக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக சாந்தி கியர்ஸ் சமூக சேவை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ``எம்.டி மாற்றச் சொன்னதால் இந்த விலை மாற்றம். இனி இந்த விலையில் எங்களது சேவை தொடரும்" என்றனர்.
உணவில் மட்டுமல்ல, கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று சாந்தி கியர்ஸின் சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 சதவிகிதம் குறைவு.
இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் சுப்பிரமணியம் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை. தற்போதுள்ள, பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்துவிட்டன. எந்த ஊடகத்தையும் அவர் சந்திக்கவில்லை. அரசு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் சுப்பிரமணியம்.
முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


