சென்னை: சென்னை தியாகராய நகரில் டியூசன் படிக்க வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டியூசன் கற்றுக் கொடுத்த ஆசிரியை உள்பட இருவா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தியாகராய நகா் ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் செ.சஞ்சனா (28). இவரது காதலா், கூடுவாஞ்சேரி அம்பாள் காலனியைச் சோ்ந்தவா் சே.பாலாஜி (34). சஞ்சனா, தனது வீட்டில் டியூசன் நடத்தி வருகிறாா். இவரது டியூசனில் படிக்கும் சிறுமிக்கு, பாலாஜி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதற்கு சஞ்சனாவும் துணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தந்தை, வடபழனி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சஞ்சனாவையும், பாலாஜியையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முதற்கட்ட விசாரணையில், டியூசன் படிக்க வந்த சிறுமியை, வேறொரு சிறுவனுடன் தவறான முறையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கச் செல்லி பாலாஜியும், சஞ்சனாவும் தன்னை துன்புறுத்தியதாக, சம்பந்தப்பட்ட சிறுமி பெற்றோரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுவரை ஒரே ஒரு சிறுமிதான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலும், இதர மாணவ, மாணவிகளுக்கும் இதுபோன்ற துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதலில் இதுபோன்ற புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, பிறகு சிறுவர், சிறுமிகளை மிரட்டுவதற்கு குற்றவாளிகள் இதனைப் பயன்படுத்தக் கூடும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்புக்காகத்தான், ஆசிரியையிடம் பெற்றோர்கள் டியூசன் அனுப்புகிறார்கள். ஆனால், ஆசிரியைகளும் இதுபோன்ற மோசமான விஷயத்தை பிள்ளைகளுக்கு செய்தால் என்னதான் செய்வது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


