காற்றின் தரம் குறையும் போது அரசு என்ன செய்ய வேண்டும்?
மோசமான நகரமைப்புத் திட்டத்தின் காரணமாகவே காற்று மாசு அதிகரிக்கிறது. சாலைகளின் அகலம், ஒரு கட்டடத்துக்கும், மற்றொரு கட்டடத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளி, மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவை காற்று மாசு பிரச்னையில் எதிரொலிக்கின்றன. ஆனால் இந்த சமயத்தில், அரசு சில புள்ளி விவரங்களைத் திரட்ட வேண்டும். அப்போதுதான் காற்று மாசைக் கட்டுப்படுத்த திட்டமிட முடியும். காற்றின் தரம் குறித்து ஒரு நீண்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும். காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவு, கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, இதர ரசாயனங்கள் எவ்வளவு என கண்டறிய வேண்டும்