கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஸ்விக்கியில் சாப்பாடு வர தாமதமானதால் நடந்த அக்கப்போரைப் பாருங்கள்.. இது வேற லெவல்!

உணவு தாமதமாகக் கொண்டு வந்ததால், வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கியில் உணவைக் கொண்டு வந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

News image

food delivery delay

Updated On :5 நவம்பர் 2019, 7:23 am


சென்னை: உணவு தாமதமாகக் கொண்டு வந்ததால், வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கியில் உணவைக் கொண்டு வந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ஸ்விக்கியில் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு வெகு நேரம் ஆகியும் வராதததால், அந்நிறுவனத்தின் கஸ்டமர்கேரில் புகார் கொடுக்கிறார்.

பிறகு வெகு நேரம் கழித்து உணவைக் கொண்டு வந்த ஸ்விக்கி ஊழியர் ராஜேஷ் கன்னாவுக்கும், பாலாஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதே பகுதியில் இருந்த சில ஸ்விக்கி ஊழியர்களை ராஜேஷ் உதவிக்கு அழைத்துள்ளார்.

அவர்கள் வந்ததும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்து பாலாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராஜேஷ் கன்னா மற்றும் ஸ்விக்கி ஊழியர்கள் 3 பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், கைகலப்பின் போது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் செயினைக் காணவில்லை என்று பாலாஜி புகார் அளித்திருப்பதுதான்.

அதே சமயம், பாலாஜி குடித்திருந்ததாகவும், தன்னிடம் வேண்டும் என்றே சண்டை போட்டதாகவும் ராஜேஷும் புகார் கொடுத்தார். இரு தரப்பினரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.