சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஸ்விக்கியில் சாப்பாடு வர தாமதமானதால் நடந்த அக்கப்போரைப் பாருங்கள்.. இது வேற லெவல்!

உணவு தாமதமாகக் கொண்டு வந்ததால், வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கியில் உணவைக் கொண்டு வந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

News image
food delivery delay
Updated On :31 ஜனவரி 2024, 12:59 pm

ENS


சென்னை: உணவு தாமதமாகக் கொண்டு வந்ததால், வாடிக்கையாளருக்கும் ஸ்விக்கியில் உணவைக் கொண்டு வந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ஸ்விக்கியில் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு வெகு நேரம் ஆகியும் வராதததால், அந்நிறுவனத்தின் கஸ்டமர்கேரில் புகார் கொடுக்கிறார்.

பிறகு வெகு நேரம் கழித்து உணவைக் கொண்டு வந்த ஸ்விக்கி ஊழியர் ராஜேஷ் கன்னாவுக்கும், பாலாஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதே பகுதியில் இருந்த சில ஸ்விக்கி ஊழியர்களை ராஜேஷ் உதவிக்கு அழைத்துள்ளார்.

அவர்கள் வந்ததும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்து பாலாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ராஜேஷ் கன்னா மற்றும் ஸ்விக்கி ஊழியர்கள் 3 பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், கைகலப்பின் போது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்கச் செயினைக் காணவில்லை என்று பாலாஜி புகார் அளித்திருப்பதுதான்.

அதே சமயம், பாலாஜி குடித்திருந்ததாகவும், தன்னிடம் வேண்டும் என்றே சண்டை போட்டதாகவும் ராஜேஷும் புகார் கொடுத்தார். இரு தரப்பினரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.