டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம்: அதுவும் உயிரைக் காக்கும் தலைக்கவசம்!

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வோரும், டீலர்களும், புதிய வாகனங்களை விற்பனை செய்யும் போது அதனுடன் 2 தலைக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2019, 10:27 am


தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வோரும், டீலர்களும், புதிய வாகனங்களை விற்பனை செய்யும் போது அதனுடன் 2 தலைக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை இது குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், சாலை விபத்தினால் தலைக்கவசம் அணியாதவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 73 சதவீதம் தலைக்கவசம் அணியாததால் நடப்பதாகவே இருக்கிறது. எனவே, புதிய வாகனங்களை விற்கும் போது அதனுடன் தரமான இரண்டு தலைக்கவசங்களை வெளியிட வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி வெளியிட்ட உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இதற்கு வாகன டீலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த உத்தரவால் தங்களது லாபம் குறையும் என்றும், இரண்டு தலைக்கவசங்களின் விலை ரூ.3000 முதல் ரூ.3500 வரை ஆகும் என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.