கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

குடத்த தூக்கிட்டு அலயற நமக்கு ஒரு ரயிலுக்கு எவ்வளவு தண்ணி தேவைன்னு தெரியுமா?

சென்னை ரயில் பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய செங்கல்பட்டில் இருந்து 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:07 am

ENS

சென்னை ரயில் பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய செங்கல்பட்டில் இருந்து 4.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளிலும் நீர் இல்லாத காரணத்தால், ரயில்களில் நீரை கொண்டு வர தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பேசின் பாலம் பணிமனையின் ரயில் பராமரிப்புப் பணிகளுக்கும், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அன்றாடத் தேவைகளுக்கும், சிறப்பு ரயில் மூலம் 4.5 லட்சம் லிட்டர் நீர் செங்கல்பட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

பேசின் பாலம் அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர், ரயில்களை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 தண்ணீர் டேங்குகள் இருக்கும். ஒவ்வொன்றும் 450 - 600 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவில் இருக்கும். ஒரு ரயில் தனது பயணத்தை முடிக்க 1500 முதல் 2000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒரு ரயிலில் இருக்கும் அனைத்து தண்ணீர் டேங்குகளையும் நிரப்ப 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. 

இருக்கும் தண்ணீருக்கு ஏற்ப டேங்குகளை நிரப்புகிறோம். ஒரு வேளை தண்ணீர் இன்றி டேங்குகளை நிரப்பாமல் விட்டுவிட்டால், அடுத்த ரயில் நிலையங்களுக்கு நீரை நிரப்புமாறு (ஜோலார்பேட்டை -  ஈரோடு அல்லது விழுப்புரம்) அறிவுறுத்திவிடுவோம். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் தண்ணீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறோம்  என்கிறார்கள் அதிகாரிகள்.

தினமும் சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 55 விரைவு ரயில்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 33 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.