திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

2031க்குப் பிறகு தமிழகத்தின் மக்கள் தொகை சரிவுப் பாதையில் செல்லும்: காரணம்?

வரும் 2031 - 2041ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது சரிவு நிலையில் செல்லும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:27 am

ENS


வரும் 2031 - 2041ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது சரிவு நிலையில் செல்லும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் ஏனோ தானோ வென்று சொல்லப்படவில்லை. தமிழகத்தின் மக்கள் தொகை சரிவு என்பது 0.05% ஆக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் அதாவது 60 வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம்.

அதாவது, 2041ம் ஆண்டில் தென்மாநிலங்களில் 20 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும், ஆனால் அதே சமயம் 59 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம்தான் சற்று அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது சமீபத்திய பத்து ஆண்டுகளில் மொத்த கருத்தரித்தல் விகிதம் என்பது வேகமாகக் குறைந்து வருவதும், 2021ம் ஆண்டுகளில் மரணத்தை விட, குழந்தை பிறப்பு குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.