திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மின்ட் மணிக்கூண்டு ஒரு நாளில் 2 முறை மட்டும் சரியான நேரத்தைக் காட்டும் மர்மம் என்ன? 

1950களில் கைக்கடிகாரம் என்பது விலையுயர்ந்த பொருளாக இருந்தது. சிலரால் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்றாகவும் இருந்தது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:24 am

ENS


சென்னை: 1950களில் கைக்கடிகாரம் என்பது விலையுயர்ந்த பொருளாக இருந்தது. சிலரால் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்றாகவும் இருந்தது.

அப்போது, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகரின் முக்கியப் பகுதிகளில் அமைக்கப்பட்டதுதான் மணிக்கூண்டுகள். ஆனால், தற்போதைய வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில் கைக்கடிகாரமே மறைந்து போய்விட்டது. பிறகு இந்த மணிக்கூண்டுகளுக்கு மட்டும் மவுசுக் கூடவாப் போகிறது. குறைந்துதான் போனது.

இதனாலேயே நகரில் உள்ள மணிக்கூண்டுகள் பயன்பாடற்ற கட்டடமாக மாறி நிற்கிறது. 

சென்னையில் மட்டும் 4 மணிக்கூண்டுகள் உள்ளன. ராயப்பேட்டை, டெமெல்லௌஸ் சாலை, டௌட்டன் மற்றும் மின்ட் சாலை.

மின்ட் சாலையில் இருக்கும் மணிக்கூண்டைத் தவிர பிற 3 மணிக்கூண்டுகளிலும் இருக்கும் கடிகாரங்கள் இயங்குகின்றன. ஆனால் மின்ட் சாலையில் இருக்கும் கடிகாரம் கடந்த 2018ம் ஆண்டு முதல் இயங்காமல் 5.20 என்ற மணியில் நிற்கிறது.

டௌட்டனில் இருந்த கடிகாரம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலைடியில் 6 மாதங்களுக்கு முன்புதான் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..

இது குறித்து கார்ப்பரேஷன் அதிகாரி கூறுகையில், மின்ட் சாலையில் இருக்கும் கடிகாரம், மிகக் கனமான பெண்டுலத்தைக் கொண்டிருக்கும். இரும்புத் தட்டுக்கள், 4 அடி முட்கள், மெட்டல் கயிறுகளால் அமைக்கப்பட்டது இந்த கடிகாரம். இதனை 30 மணி நேரத்துக்கு ஒரு முறை ஸ்பேனர் பயன்படுத்தி ஊழியர் ஒருவர் கீ கொடுக்க வேண்டும். அப்போதுதான் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போதெல்லாம் ஒரு சிலர்தான் எச்எம்டி வாட்ச் வைத்திருப்பார்கள். பொது மக்கள் நேரத்தை அறிந்து கொள்ள இந்த மணிக்கூண்டு உருவாக்கப்பட்டது என்கிறார் வரலாற்று அறிஞர் வி. ஸ்ரீராம். 

மின்ட் சாலையில் உள்ள இந்த மணிக்கூண்டு 1948ம் ஆண்டு மேயர் கிருஷ்ணா ராவால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த கடிகாரம் மாஸ்டர் மற்றும் ஸ்லேவ் முறையில் இயங்கும். அதாவது, கீழிருந்து மாஸ்டர் ஒருவர் கீ கொடுத்தால், அடிமைகளைப் போல மேலிருக்கும் கடிகாரம் இயங்கும் என்பதே தொழில்நுட்பத்தின் முறை. 

இறுதியாக, மின்ட் சாலையில் இருக்கும் கடிகாரத்துக்கு என்னதான் வழி என்று கார்ப்பரேஷன் அதிகாரியிடம் கேட்டதற்கு, கடிகாரத்தை சரி செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜூலை இறுதிக்குள் ரூ.69 ஆயிரம் செலவில் இது சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.