2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தினாரா நடிகை பானுப்பிரியா?

வீட்டில் பணியாற்றும் 14 வயது சிறுமியை துன்புறுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது ஆந்திர காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:58 am

ENS


சென்னை: வீட்டில் பணியாற்றும் 14 வயது மகளை துன்புறுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

சிறுமியின் தாய் பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிழக்கு கோதாவரி மாவட்டம் சமர்டகோடா காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், கடந்த 18 மாதங்களுக்கு முன்பு தனது மகளை நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.

கடந்த சில மாதங்களாக பானுப்ரியாவின் சகோதரர் தனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னைக்குச் சென்று அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்து, சிறார் உதவி மையத்தை நாடுமாறு ஆந்திர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து நமது எக்ஸ்பிரஸ் குழுவினர் பத்மாவிடம் பேசுகையில், தனது மகளை பானுப்ரியாவின் வீட்டில் இருப்போர் துன்புறுத்துவதாகக் கூறினார்.

அதில்லாமல், எங்களது மகளை எங்களுடன் அனுப்பவும் மறுக்கின்றனர். மகளை அனுப்ப வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறுவதாகவும், தவறும் பட்சத்தில் வீட்டில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் வீடு முழுக்க சிசிடிவி கேமரா உள்ளது. அதனை பரிசோதித்தால் உண்மை என்னவென்று தெரியவரும் என்கிறார் பத்மா.

இது பற்றி பானுப்ரியா கூறுகையில், அந்த சிறுமி ஓராண்டுக்குள் மேல் இங்கு வேலை செய்கிறார். எங்கள் வீட்டில் இருந்து ஐபேட், நகைகள், பணம் மற்றும் கேமரா போன்றவற்றை அவர் திருடி தனது தாயிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி அவரிடம் விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக் கொண்டு திருடிய பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டனர். மீதமிருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்து வருவதாகக் கூறிச் சென்ற பத்மா, இதுபோன்ற பொய்ப் புகாரைக் கொடுத்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அந்த சிறுமியின் வயது குறித்து கேட்டதற்கு, பானுப்ரியா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.