2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கல்லூரி நிர்வாகத்துக்கு பயந்து ஆசிரியர்கள் செய்த வேலையைப் பார்த்தீர்களா?

கல்லூரி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைப் பார்த்து பயந்து போன பேராசிரியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரு செயலை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:57 am

ENS


கல்லூரி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைப் பார்த்து பயந்து போன பேராசிரியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரு செயலை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இணைந்திருந்தால், அவர்களுக்கு எதிராக கல்லூரி நிர்வாகம் சில பல நடவடிக்கைகளை எடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய ஆசிரியர்கள், தங்களுக்கு நிர்வாகத்தினால் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெறும் வகையில் ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்துள்ளனர்.

38 முதல் 49 வயதுடைய 12 ஆசிரியர்களில் 8 பேர் காப்பீடு எடுத்துவிட்டனர். மற்றவர்களின் காப்பீட்டுக்கான விண்ணப்பப் பணிகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

புதிய கல்லூரி நிர்வாகம், தங்களது கல்லூரியில் பணியாற்றும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

தங்கள் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களைக் கொண்டு அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்வது உள்ளிட்ட பல சித்து விளையாட்டுகளையும் நிர்வாகம் நடத்தி வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து சிலர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இருந்து விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.