/

கல்லூரி நிர்வாகத்துக்கு பயந்து ஆசிரியர்கள் செய்த வேலையைப் பார்த்தீர்களா?

கல்லூரி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைப் பார்த்து பயந்து போன பேராசிரியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரு செயலை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2019, 9:59 am


கல்லூரி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைப் பார்த்து பயந்து போன பேராசிரியர்கள் அனைவரும் ஒருமித்து ஒரு செயலை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இணைந்திருந்தால், அவர்களுக்கு எதிராக கல்லூரி நிர்வாகம் சில பல நடவடிக்கைகளை எடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய ஆசிரியர்கள், தங்களுக்கு நிர்வாகத்தினால் ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெறும் வகையில் ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்துள்ளனர்.

38 முதல் 49 வயதுடைய 12 ஆசிரியர்களில் 8 பேர் காப்பீடு எடுத்துவிட்டனர். மற்றவர்களின் காப்பீட்டுக்கான விண்ணப்பப் பணிகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

புதிய கல்லூரி நிர்வாகம், தங்களது கல்லூரியில் பணியாற்றும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

தங்கள் மாணவர்கள் மற்றும் சக ஊழியர்களைக் கொண்டு அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொல்வது உள்ளிட்ட பல சித்து விளையாட்டுகளையும் நிர்வாகம் நடத்தி வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்குப் பயந்து சிலர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தில் இருந்து விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.