2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர் ரயில் மாறுகிறது!

இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால்  போதும்.. சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:56 am

ENS

சென்னை: இன்னும் 9.5 கி.மீ. நீளப் பாதை அமைந்துவிட்டால்  போதும்.. சென்னை புறநகர் ரயில் சேவை ஒரு சுற்றுப் பாதையாக மாறி இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக மாறிவிடும்.

தக்கோலம் முதல் அரக்கோணம் வரையிலான அந்த 9.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்சேவை தொடங்கிவிட்டால் ஒன்றல்ல.. இரண்டல்ல சுமார் 235.5 கி.மீ. தொலைவுக்கு இந்த சுற்றுவட்ட ரயில்பாதை அமையும்.

ஜனவரி 25ம்  தேதி இப்புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பிப்ரவரி இறுதியில்  சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டால் ஒருவர் காலையில் சென்னை கடற்கரையில் (0 கி.மீ.) இருந்து பயணத்தைத் தொடங்கினால் அங்கிருந்து தாம்பரம் (28.6 கி.மீ.) வந்து - செங்கல்பட்டு (59.6 கி.மீ.) பிறகு - காஞ்சிபுரம் (95.6 கி.மீ.)  அப்படியே - அரக்கோணம் (123.5 கி.மீ.) - திருவள்ளூர் (162.3 கி.மீ.) - நேராக பெரம்பூர் (225.5 கி.மீ.) பிறகு அங்கிருந்து சென்னை கடற்கரை (232.5 கி.மீ.) வரை சென்று திரும்பலாம். முழுக்க முழுக்க ரயில் பாதை மூலம் சென்னையில் கால் வைக்காலேயே அதை சுற்றி வர முடியும்.

தற்போதைக்கு கொல்கத்தாவில்தான் இந்தியாவிலேயே மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதை உள்ளது. அதுவும் வெறும் 35 கி.மீ. அரக்கோணம் - தக்கோலம் ரயில் பாதை இணைந்துவிட்டால் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே சுற்றுப் பாதையாக சென்னை புறநகர்ப் பாதை மாறிவிடும் என்கிறது தெற்கு ரயில்வே.

மேலும் இதன் மூலம் காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஒச்சேரி, திருமால்புர் பகுதிகளைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய வசதி ஏற்பட உள்ளது. அதாவது இந்த ரயில் நிலையங்களில் இருந்து அரக்கோணத்துக்கும் ரயில் ஏறலாம். செங்கல்பட்டுக்கும் செல்லலாம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.