குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை 

பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:50 am

ANI

காக்காய்சாவடி: பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல நகைக்கடையின் ரூ.98 லட்சம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கேரளாவைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்படும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு தமிழகத்திலும் கிளைகள் உள்ளன. அந்த கிளைகளுக்கு கேரளாவில் இருந்து முறையான ஆவணங்களுடன் கொண்டு வரப்பட்ட ரூ. 98 லட்சம மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பம் நடந்துள்ளது. 

இதுதொடர்பாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட சம்பவமானது திங்கள்கிழமையன்று (07.01.19) தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதியான வாளையாறுக்கு அருகே உள்ள சாவடி என்னும் இடத்தில் நடந்துள்ளது. கேரளாவில் இருந்து, முறையான ஆவணங்களுடன் ரூ. 98 லட்சம மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கார் ஒன்றில் கொண்டு வரப்பட்டது. 

நகைகள் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட காரை இரண்டு கார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சாவடி பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றை குறிப்பிட்ட வாகனம் நெருங்கிய போது, தொடர்ந்து வந்த இரு கார்களும்  நகைகள் உள்ள குறிப்பிட்ட காரை முன்னும் பின்னுமாக சுற்றி வளைத்தது. அதில் இருந்து இறங்கியவர்கள் இந்த காரின் கண்ணாடிகளை உடைத்து ஓட்டுனர்களை வெளியே தள்ளி விட்டு, காருடன் தப்பிச் சென்றனர்.  

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்பீட்டு நிறுவனத்தில் இழப்பீடு பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட காரை சற்று தொலைவில் கண்டறிந்தனர். ஆனால் அதில் நகைகள் எதுவும் இல்லை. தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைநடைபெற்று வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.