சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் அடையாளமாக விளங்கும் சிவப்பு நிறக் கட்டடம் இன்னும் 4 நாட்களுக்கு வெள்ளையாகவேக் காட்சி தரும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணி நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அந்த கட்டடத்தின் மேற்பாகத்தில் சில பூச்சு வேலைகள் முடிந்து, ரசயானப் பூச்சும் நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து, அந்த அடையாளச் சின்னக் கட்டடம் முழுவதும் வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகே அந்த மெருன் நிறம் அடிக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் கடைசியாக 2016ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது என்று சொல்கிறார் ரயில்வே அதிகாரி.
ராயபுரம் துறைமுக ரயில்நிலையம் அதிக நெரிசல் காரணமாக வேறு ஒரு இடத்தை முக்கிய சந்திப்பாக மாற்ற திட்டமிட்டு 1873ம் ஆண்டு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது.
ரோமானியக் கட்டடக் கலைக்கு உதாரணமாக, மிக உயர்ந்த கட்டடத்தில் கடிகாரம் அமைக்கும் வகையில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த கலாசார அடையாளமாக விளங்கும் கட்டடத்தின் அழகை பராமரிக்க ரூ.84 லட்சம் செலவிடப்படுகிறது.
இந்த கட்டடத்தை பராமரிக்க, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டடத்துக்கு பெயிண்டிங் செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதில்லாமல், இந்த கட்டடத்தை பாதுகாக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்குகிறார்கள்.
தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். 57 விரைவு, அதிவிரைவு, பிரீமியர் ரயில்களும், 110 ரயில் சேவைகளும், 15 இதர ரயில்கள் சென்னை சென்டிரல் ரயில்நிலையத்தைக் கடந்தும் செல்கின்றன.
ஒவ்வொரு நாளும் 65 ஆயிரம் டிக்கெட்டுகளும், 10,500 நடைமேடை டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் வருவாய் கிட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


