ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மிகள் மூலம் அறிந்து கொண்ட ஆச்சரியத் தகவல்

எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

News image
Updated On :4 பிப்ரவரி 2019, 10:03 am


ஜெனிவா: எகிப்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதைக்கப்பட்டிருக்கும் மம்மிகளுக்கு வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால், அவை நல்ல நிலையில் உள்ளன. 

எகிப்தின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஒரே இடத்தில் 40க்கும் மேற்பட்ட மம்மிகள் கண்டறியப்பட்டன. 

இந்த 40 மம்மிகளில் 12 மம்மிகள் சிறார்களுடையவை. 6 மம்மிகள் நாய் உள்ளிட்ட விலங்குகளுடையவை. மற்றவை ஆண் மற்றும் பெண்களுடையவை என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மம்மிகளில் சிலவை மண்ணில் அப்படியே கிடத்தப்பட்டுள்ளன. சில மம்மிகள் திறந்த சவப்பெட்டி போன்ற மண்ணால் ஆன பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. 

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 232ம் ஆண்டு முதல் 30ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்த மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளன. 

இந்த மம்மிகள் கண்டறியப்பட்ட இடங்கள், ஒரு பெரிய முதலாளியின் குடும்பத்தினர் மற்றும் அவர் வளர்த்த விலங்குகளுக்கான இடுகாடாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதல் முறையாக, மனிதனின் மம்மியும், அருகே விலங்குகளும் மம்மியாக மாற்றப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது இந்த தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்திருப்பது எகிப்திய நாகரீகம் பற்றிய ஒரு புதிய தகவலைக் கொடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.