2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் தெற்கு சென்னைதான் எப்பவும் டாப்!

சென்னைக்குக் குடியேற வரும் மக்களுக்கு எந்த பகுதி அதிகம் பிடிக்கிறது என்பதை வாக்காளர் இறுதிப் பட்டியல் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

News image
இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்.
Updated On :31 ஜனவரி 2024, 7:02 am

ENS


சென்னைக்குக் குடியேற வரும் மக்களுக்கு எந்த பகுதி அதிகம் பிடிக்கிறது என்பதை வாக்காளர் இறுதிப் பட்டியல் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

அதாவது, கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு, 2019ம் ஆண்டு தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்  நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னையின் தெற்கு தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் இணைந்துள்ளனர். அவ்வளவு ஏன் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோளிங்கநல்லூர் விளங்குகிறது.

சென்னை தெற்கு தொகுதியில் 2014ல் 17,14,987 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 19,95,709 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகரித்திருந்தாலும் அது 2014ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 91,188 மட்டுமே அதிகம்.

இதற்கு நேர்மாறாக எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட மத்திய சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இங்கு 12,80,251 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,95,603 ஆகக் குறைந்துள்ளது.

இப்பகுதிகளில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு குடிசை மாற்று வாரியங்கள் வேறிடங்களில் அமைக்கப்பட்டதால் இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை சரிந்திருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே, சென்னையில் இருப்போரும் சரி, தமிழகத்தின் வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்குக் குடியேற விரும்புவோரும் சரி தெற்கு சென்னையை அதிகம் விரும்புவது இந்த வாக்காளர் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.