ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

சென்னையின் ரிப்பன் மாளிகையில் விழுந்த மிகப்பெரிய விரிசல் கவனிக்கப்படுமா?

நூற்றாண்டு பழைமைவாய்ந்த கட்டடமான ரிப்பன் மாளிகையில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது.

News image

சென்னையின் ரிப்பன் மாளிகையில் விரிசல்

Updated On :24 டிசம்பர் 2019, 7:00 am

சென்னை: நூற்றாண்டு பழைமைவாய்ந்த கட்டடமான ரிப்பன் மாளிகையில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது.

ரிப்பன் மாளிகைக்கு அருகே நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமா? அல்லது கட்டடத்தை சரிவர பராமரிக்காததன் காரணமாக இந்த விரிசல் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவரவில்லை.

ஆனால், மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்ட பிறகே இந்த விரிசல் ஏற்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அந்த விரிசலை சரி செய்யும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

மாநகர ஆணையர் மற்றும் துணை ஆணையர்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கும், ரிப்பன் மாளிகையின் முதல் தளத்தில் இருந்து இரண்டாவது தளம் வரை இந்த விரிசல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

106 ஆண்டு கால பழைமைவாய்ந்த இந்த கட்டடத்தின் உட்புறங்களில் மட்டுமல்லாமல், வெளிப்புறங்களிலும் விரிசல்கள் காணப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்தும் போது பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்கள் இந்த கட்டடத்தைக் கட்ட முடிவு செய்தனர். ஒப்பந்ததாரர் லோகநாதன் முதலியாரால் ரூ.7.5 லட்சம் செலவில் இந்த கட்டடம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.