ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கிருஷ்ண ஜெயந்திக்கு நன்கொடை தர மறுத்த கடைக்காரருக்கு அடி-உதை: ரவுடியிசத்தின் கோரமுகம் (விடியோ)

ரவுடியிசத்துக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் தற்போது ஆன்மிகத்திலும் இந்த ரவுடித்தனம் நுழைந்திருப்பது தான் வேதனை அளிக்கிறது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2019, 9:56 am


ரவுடிசத்துக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் தற்போது ஆன்மிகத்திலும் இந்த ரவுடித்தனம் நுழைந்திருப்பது தான் வேதனை அளிக்கிறது.

பல மாநிலங்களில் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பச் சொல்லி பிற மதத்தினரை துன்புறுத்தும் கும்பல்களைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது, இந்த ஆன்மிக ரவுடித்தனம் தமிழகத்திலும் பரவியிருக்கிறது. ஆனால் வேறு ரூபத்தில். 

திருப்பூர் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட, ஒவ்வொரு கடைக்காரரும் ரூ.1000 தர வேண்டும் என்று கடைதோறும் கட்டாய நன்கொடை வசூல் நடைபெற்றது.

அப்போது, ஒரு கடைக்காரரான சிவா கட்டாய வசூலுக்கு இணங்காமல், ரூ.300 மட்டுமே தர முடியும் என்று கூறினார். சிவா ஆயிரம் ரூபாய் கொடுக்க மறுத்ததால், நன்கொடை வசூலிக்க வந்த விஎச்பியினர் அவரை கடுமையாக தாக்கினர்.

அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. அதில், சிவாவை ஒரு கும்பல் தாக்குகிறது. அருகே இருந்த பெண் அவர்களை தடுப்பதும் அதில் பதிவாகியிருந்தது.

திருப்பூரில் சிட்கோ அருகே ஒவ்வொரு ஆண்டும் விஎச்பியினர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அந்த சிலை வைப்பதற்காக விஎச்பியினர் இவ்வாறு கடைகளில் கட்டாய வசூல் செய்திருப்பது இந்த விடியோ மூலம் ஊடகங்களில் வைரலாகியுள்ளது. விடியோவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, கட்டாய வசூல் செய்து, கடைக்காரரை அடித்து உதைத்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக விஎச்பி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.