குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கிருஷ்ண ஜெயந்திக்கு நன்கொடை தர மறுத்த கடைக்காரருக்கு அடி-உதை: ரவுடியிசத்தின் கோரமுகம் (விடியோ)

ரவுடியிசத்துக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் தற்போது ஆன்மிகத்திலும் இந்த ரவுடித்தனம் நுழைந்திருப்பது தான் வேதனை அளிக்கிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:07 am

ENS


ரவுடிசத்துக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் தற்போது ஆன்மிகத்திலும் இந்த ரவுடித்தனம் நுழைந்திருப்பது தான் வேதனை அளிக்கிறது.

பல மாநிலங்களில் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பச் சொல்லி பிற மதத்தினரை துன்புறுத்தும் கும்பல்களைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது, இந்த ஆன்மிக ரவுடித்தனம் தமிழகத்திலும் பரவியிருக்கிறது. ஆனால் வேறு ரூபத்தில். 

திருப்பூர் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட, ஒவ்வொரு கடைக்காரரும் ரூ.1000 தர வேண்டும் என்று கடைதோறும் கட்டாய நன்கொடை வசூல் நடைபெற்றது.

அப்போது, ஒரு கடைக்காரரான சிவா கட்டாய வசூலுக்கு இணங்காமல், ரூ.300 மட்டுமே தர முடியும் என்று கூறினார். சிவா ஆயிரம் ரூபாய் கொடுக்க மறுத்ததால், நன்கொடை வசூலிக்க வந்த விஎச்பியினர் அவரை கடுமையாக தாக்கினர்.

அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. அதில், சிவாவை ஒரு கும்பல் தாக்குகிறது. அருகே இருந்த பெண் அவர்களை தடுப்பதும் அதில் பதிவாகியிருந்தது.

திருப்பூரில் சிட்கோ அருகே ஒவ்வொரு ஆண்டும் விஎச்பியினர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

அந்த சிலை வைப்பதற்காக விஎச்பியினர் இவ்வாறு கடைகளில் கட்டாய வசூல் செய்திருப்பது இந்த விடியோ மூலம் ஊடகங்களில் வைரலாகியுள்ளது. விடியோவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, கட்டாய வசூல் செய்து, கடைக்காரரை அடித்து உதைத்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக விஎச்பி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.