இந்நிகழ்வின் அடையாளம் இந்த நிலப்பகுதியில் உள்ளதுபோல உலகில் வேறெங்கும் இல்லை என உறுதியாகக் கூறலாம். திருச்சி மாவட்டத்தில் கல்லக்குடி, கல்லகம், டால்மியா, திருப்பட்டூர், பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, தரணி, பிலிமிசை, கூத்தூர், சிறுகன்பூர், அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி, மேலப்பழுவூர், கல்லக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் இருந்த பகுதியானது மேடு பள்ளமாக இருப்பதை தற்போதும் காணமுடிகிறது. கடல் இருந்த பகுதியாக அரியலூர் இருந்ததால், இங்கு கால்சியம், இரும்பு, அலுமினியம்,வேதிப்பொருள் கலவையான கடல் அடிமண்டல் ஆகியவை சுண்ணாம்புக்கல், ஜிப்சம், நாடியூல்ஸ் என்ற படிக வகைப் பாறைகளாகவும், அதனிடையே பாசில் என்ற தொல்லுயிரினங்களும் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.