திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், திருச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதே போல இந்த ஆண்டு வாழைத்தோட்டங்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு பருவ மழையும் பொய்த்து, காவிரியிலும் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் சம்பா சாகுபடியை மிக உற்சாகத்தோடு துவக்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

