மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை: சம்பா சாகுபடிக்கான பணிகளைத் தொடங்கிய திருச்சி விவசாயிகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், திருச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:14 pm

ENS


திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், திருச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதே போல இந்த ஆண்டு வாழைத்தோட்டங்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு பருவ மழையும் பொய்த்து, காவிரியிலும் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் சம்பா சாகுபடியை மிக உற்சாகத்தோடு துவக்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.