தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை விமான நிலைய விரிவாக்கத்தால்.. பிள்ளைகளுக்கு பெண் கிடைக்கவில்லை: மக்களின் கவலைக் குரல்

சென்னை விமான நிலையம் விரிவாக்கப்படும் என்ற செய்தி மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், விமான நிலையத்தை சுற்றி வாழும் மக்களுக்கு?

News image
Updated On :26 ஏப்ரல் 2018, 9:48 am


சென்னை: சென்னை விமான நிலையம் விரிவாக்கப்படும் என்ற செய்தி மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால், விமான நிலையத்தை சுற்றி வாழும் மக்களுக்கு?

சென்னை விமான நிலையத்தை சுற்றியிருக்கும் பொழிச்சலூர், கௌல் பஜார் பகுதியில் வாழும் மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்தியாகவே இது இருக்கிறது.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் 150 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட உள்ளது. இதனால், தங்களது வாழ்விடம் பறிபோகுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இது குறித்து விமான நிலைய இயக்குநர் ஜி. சந்திரமௌலி பங்கேற்ற பொதுமக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இதில் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்விடங்கள் விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக அரசால் கையகப்படுத்தப்படுமா என்ற கேள்வியோடு வந்திருந்தனர்.

அது குறித்துப் பேசிய இயக்குநர், முதலில் சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 200 ஏக்கர் நிலம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. பிறகு இது 150 ஏக்கர் நிலமாக சுருக்கப்பட்டது. இதில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி மையத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலமும் அடங்கும். எனவே, மீதமிருக்கும் 110 ஏக்கர் நிலத்தைத்தான் மாநில அரசு பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தித் தர உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கௌல் பஜாரைச் சேர்ந்த கதிரவன், இந்த பகுதியில் வாழும் மக்கள் எப்போதுமே மன உளைச்சலோடுதான் இருக்கிறார்கள். அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தும் நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், எங்கள் பகுதியில் வாழும் பிள்ளைகளுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வருவதில்லை என்று வருத்தத்தோடு கூறினார்.

இதற்கு பதில் அளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நிச்சயமாக விமான விரிவாக்கப் பணிக்காக உங்கள் நிலம் கையகப்படுத்தப்படாது. ஏன் என்றால், பல்வேறு சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதால் கௌல் பஜார் பகுதியை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

மேலும், பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்களின் கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக பொழிச்சலூரில் எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது. தற்போதைக்கு மனப்பாக்கம் பகுதியில் 50 ஏக்கர் நிலமும், கோலப்பாக்கத்தில் 30 ஏக்கர் நிலமும், கௌல்பஜார் பகுதியில் 2.98 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.