பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து 323 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், தற்போது 290 பேர்தான் இருக்கிறார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறுகிறார். மற்ற 33 பேரின் நிலைமை குறித்து எந்த தகவலும் இல்லை. கருணை இல்லத்தில் முதியவர்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால், நிரந்தரமாக ஒரு மருத்துவர் இல்லை. ஒரு முதியவர் இல்லத்தில் இறந்தால், உடனடியாக அவர்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு புதைத்துவிடுகிறார்கள். எந்த மருத்துவரிடமும் ஆலோசனை பெறுவதில்லை என்பது மட்டுமே குறை என்று என்சிஎச்ஆர்ஓவின் நிர்வாகி ஏ. மார்க்ஸ் கூறியுள்ளார்.