தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரொட்டித் துண்டு, கொஞ்சம் தண்ணீருடன் 80 வயது தாயை தவிக்கவிட்டுச் சென்ற மகன்

முதியவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 

News image
Updated On :22 நவம்பர் 2017, 9:11 am


காரைக்குடி: முதியவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. 

காரைக்குடியில், பிரபு நகரில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர், படுத்த படுக்கையாக இருக்கும் தனது 80 வயது தாயை, சில ரொட்டுத் துண்டுகளையும், பாட்டிலில் தண்ணீரையும் வைத்துவிட்டு 8 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார்.

வீட்டையும் பூட்டி, வீட்டு வாயிலில் இருக்கும் கேட்டையும் பத்திரமாக பூட்டிச் சென்ற ராஜேந்திரன், தனது தாயை மட்டும் போர்ட்டிகோவில் ஒரு கட்டிலில் கிடத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறை உதவியுடன் அந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவரது உடல்நிலை இருப்பதால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கட்டிலில் எந்த அசைவும் இன்றி மூதாட்டி படுத்திருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து விட்டதாக முதலில் கருதியுள்ளனர். பிறகு தான் அவர் உயிரோடு இருப்பதே தெரிய வந்தது.

முன்பெல்லாம் ராஜேந்திரன் வெளியூர் செல்லும் போது, தாய்க்கு உணவளிக்குமாறு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை யாரிடமும் சொல்லாமல் போர்டிகோவில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து விசாரித்து வரும் காவல்துறையால், ராஜேந்திரனை இதுவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.