திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஒரே ஆண்டில் மூன்று முறை போடப்பட்ட சாலை: நான்கு கேள்விகளுக்கு விடை கிடைத்தால் போதும்

மந்தைவெளியில் ஒரே ஒரு சாலையைப் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறப்போர் இயக்கம் பெற்றுள்ளது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:11 pm

ENS


சென்னை: மந்தைவெளியில் ஒரே ஒரு சாலையைப் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறப்போர் இயக்கம் பெற்றுள்ளது. அதில் மிகப்பெரிய மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஒரே ஆண்டில் மூன்று முறை போடப்பட்டதாக கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கணக்கில் ரூ.26 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட தொகை மோசடி என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் இதுதான்.

சாலை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக 2016ம் ஆண்டு மே 30ம் தேதி ரூ.36,97,776 லட்சம் செலவில் சாலை போடப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி ஏற்படுத்த சாலை தோண்டப்பட்டது.

பிறகு சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடங்களில் ஒட்டுப்போடும் பணிக்காக ரூ.2.25 லட்சம் எம்பிகே என்டர்பிரைசஸ் என்ற வேறொரு ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் கேட்கும் கேள்வி என்னவென்றால், சாலை போட்ட ஒப்பந்ததாரரே அந்த பணியை செய்யாதது ஏன்? அல்லது அவருக்கே, ஒட்டுப் போடும் பணியை அளிக்காதது ஏன்? என்பதே.

அடுத்து, இந்த ஒட்டுப் போடும் பணிகள் முடிந்ததும், மீண்டும் அதே சாலையைப் போட்டதாக டிசம்பரில் ரூ.26 லட்சத்துக்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரசீதில் காட்டப்பட்டது போல, டிசம்பரில் சாலை போடப்படவே இல்லை. அது முழுக்க முழுக்க போலி ரசீது என்பது தெரிய வந்துள்ளது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு தற்போது அந்த சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் கூறுவது என்னவென்றால், அந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. ஆனால், அந்த சாலை தற்போதும் 3 ஆண்டுகளுக்கான தர உத்தரவாதக் காலத்துக்குள்தான் இருக்கிறது. அதாவது, இந்த சாலையைப் போட மேற்கொள்ளப்பட்ட முதல் ஒப்பந்தத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து புகார் செய்யவும் அறப்போர் இயக்கம் முடிவு செய்துள்ளது. அடுத்து எங்கள் இலக்கு, ஒப்பந்ததாரர், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இடையிலான தொடர்பு பற்றி வெளிக்கொணர்வதே என்கிறார்கள்.

அறப்போர் இயக்கம் கேட்கும் அந்த நான்கு கேள்விகள் இதுதான்
1. மெட்ரோ வாட்டர் சேவைக்காக சாலையை தோண்ட திட்டமிட்டு ஜூலையிலேயே அச்சாலையை போக்குவரத்துக்கு தடை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.37 லட்சம் செலவில் மே 30ம் தேதி சாலை போட்டது ஏன்?
2. சாலை போட்டு 4 மாத காலத்துக்குள் ஒட்டுப் போடும் பணி வேறொரு ஒப்பந்ததாரர் மூலம் செப்டம்பர் 24ம் தேதி மேற்கொள்ளப்பட்டது ஏன்?
3. சரி மீண்டும் செப்டம்பரில் ஒட்டுப் போடப்பட்டது என்றால், மீண்டும் ரூபாய் 26 லட்சம் செலவில் டிசம்பரில் சாலை போட்டது ஏன்?
4. இதில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியான நிலையில், எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.