அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

புதுச்சேரியில் ஜவஹர்லால் நேரு நினைவு நாள்: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி உள்பட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:37 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி உள்பட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியாள் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ. டி.ஜெயமூர்த்தி, நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, ஏகேடி ஆறுமுகம், உள்ளிட்டோர் நேருவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காலையிலே எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள தனது வீட்டில் முதல்வர் நாராயணசாமி நேரு படத்துக்கு மாலை அணிவித்தார். செய்தி விளம்பரத்துறை பின்னர் அரசு செய்தி விளம்பரத்துறை சார்பில் கடற்கரை அருகே உள்ள நேரு சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்தார். அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத்தலைவர் வைத்திலிங்கம், துணைத் தலைவர் சிவக்கொழுந்து, ஜெயமுர்த்தி, மற்றும் செய்தித்துறை இயக்குநர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 100 அடி சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேரு படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மாலை அணிவித்தார். நிர்வாகிகள் பாலன், ஜெயபால், வேல்முருகன், ஞானசேகரன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.