தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தனியார் நிறுவனங்கள் தயிரைக் கூட பாலாக்குகிறார்கள்: அமைச்சரின் சிந்திக்க வைக்கும் புகார்

தனியார் பால் நிறுவனங்களில், தயிரைக் கூட பல்வேறு சுழற்சிகளில் மீண்டும் பாலாக்குவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 மே 2017, 11:31 am


சென்னை: தனியார் பால் நிறுவனங்களில், தயிரைக் கூட பல்வேறு சுழற்சிகளில் மீண்டும் பாலாக்குவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஊடகங்களில் மிகக் காட்டமான கேள்விகளும் எழுப்பப்பட்டன. அதற்கும் அவர் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று தனியார் பால் நிறுவனம் ஒன்று சென்னையில், அமைச்சர் கூறுவது போல, எங்கள் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்று விளக்கம் கூறியது.

இந்த விளக்கம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, தனியார் பால் நிறுவனங்கள் நீண்ட நேரம் தங்களது பால் கெட்டுப் போகாமல் இருக்க ஹைட்ரோஜென் பெராக்ஸைட் (H2O2) என்ற ஆசிட்டை பாலில் கலக்கிறார்கள். சுத்தமான பால் என்பது பிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்தால் 5 மணி நேரத்தில் கெட்டுப் போய்விடும். நிச்சயம் ஆவின் பால் இந்த சோதனையில் தேர்ச்சி பெறும் என்று சவால் விடுகிறேன் என்றார்.

மேலும், சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு நான்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தனியார் நிறுவனப் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாலில் கலப்படும், பாலில் ரசாயனம் என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் தாண்டி நாம் வாங்குவது பாலே இல்லை, தயிர் என்றால் நிச்சயம் கதிகலங்கத்தான் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.