சென்னை: கோடை வெப்பத்தைப் போலவே சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளன.
கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி விலையும் 10 நாளில் இரட்டிப்பாக வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் கணித்துள்ளனர்.
மொத்த விற்பனைக் கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.80-90 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு சில மாதங்களுக்கு தொடரும் என்றும், வரத்து அதிகரித்தால்தான் விலை குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
பீன்ஸ், காரட், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் பீன்ஸ் விலைதான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கேரட் மற்றும் அவரைக்காய் விலையும் பீன்ஸுக்கு நிகராக ஒரு கிலோ ரூ.60-70 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையான பீட்ரூட் தற்போது இரு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது.
தற்போதைக்கு வெங்காயம், தக்காளி விலைகள் மட்டுமே ஓரளவுக்குக் குறைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.10க்கும், வெங்காயம் ரூ.15க்கும் மொத்த விற்பனைக் கடைகளில் விற்கப்படுகிறது.
காய்காறிகளின் விலை உயர்வுக்குக் காரணம், குறைந்த வரத்து தான் என்றும், தினமும் 450 முதல் 500 டிரக்குகளில் வந்து கொண்டிருந்த காய்கறிகள் கடந்த 2 வாரங்களாக 350 டிரக்குகளில் மட்டுமே வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தக்காளி விலையும் இரட்டிப்பாகும் என்று கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் கழகத்தின் செயலர் அப்துல் காதர் கூறியுள்ளார்.
வெப்ப நிலை அதிகரித்திருப்பதால், கொத்தமல்லி வரத்து குறைந்து தற்போது ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.15-20க்கு விற்பனையாகிறது. தக்காளி, வெங்காயம் விலை மட்டுமே வாங்கும் அளவில் இருப்பதாகவும், மற்ற காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குமுறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓமலூா் அருகே மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி

வேலூா் மாவட்டத்தில் 19 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது

வீரபாண்டி தொகுதி 93.41 சதவீதம் வாக்குப்பதிவு; 11 தொகுதிகளில் முதலிடம்!

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


