அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

புதுவையில் இருந்து ரௌடிகளை வெளியேற்ற காவல்துறைக்குமுதல்வர் நாராயணசாமி உத்தரவு

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:29 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ரௌடிகளை வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடாத நிலையில் நாராயணசாமி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் பதவி விலகினார். இதையடுத்து அத்தொகுதியில் கடந்த 2016 நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் அண்ணா நகரில் உள்ள பிற்பட்டோர் கழக வளாக கீழ்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் புதன்கிழமை திறந்து வைத்தார். முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். தில்லி பிரதிநிதி ஜான்குமார் பெயர்ப்பலகையை திறந்தார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், இரா. சிவா எம்.எல்.ஏ., முதல்வர் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., திமுக வடக்கு அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. நடந்த கொலைகள் வந்து திட்டமிட்டவை இல்லை. குடும்பத்துக்குள் நேரிட்டது. ரௌடிகளுக்குள் ஏற்பட்டது.
ரௌடிகளை ஒடுக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

ரௌடிகளை புதுவையில் இருந்து வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் பாதுகாப்பாக தான் உள்ளனர். சட்டம் ஒழுங்கை யார் சீர்குலைத்தாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.