புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பிரபல கார் பந்தய வீரர் விபத்தில் பலி: தீப்பிடித்து எரியும் காரின் வீடியோ

சென்னையில் நடந்த கார் விபத்தில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் பரிதாபமாகப் பலியானார்கள்.

News image
Updated On :18 மார்ச் 2017, 5:38 am

இன்று காலை சென்னையில் நடந்த கார் விபத்தில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் பரிதாபமாகப் பலியானார்கள். 

இன்று காலை 3 மணிக்கு சென்னை சாந்தோம் சாலையில் அஸ்வின் ஓட்டி வந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடனே காரில் தீ பரவியதால், அஸ்வினும் அவரது மனைவி நிவேதிதாவும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். நிவேதிதா ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள். இருவரின் உடலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அடையார் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.

இந்நிலையில் கார் எரிந்துகொண்டிருந்தபோது சிலர் அதை செல்போன் வழியாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.