சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ரிட்டயர்மென்ட் ஆன ரௌடிகளை மட்டுமே போலீஸார் கைது செய்கின்றனர்: எம்.எல்.ஏ பாஸ்கர் கிண்டல்

புதுச்சேரியில் ரிட்டயர்மென்ட் ஆன ரௌடிகளை மட்டுமே போலீஸார் கைது செய்கின்றனர் என அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் கிண்டல் செய்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:39 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரிட்டயர்மென்ட் ஆன ரௌடிகளை மட்டுமே போலீஸார் கைது செய்கின்றனர் என அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் கிண்டல் செய்துள்ளார்.

அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்): எனது தொகுதியில் 3 காவல்நிலையம் வருகிறது, டி. நகர், லாஸ்பேட்டை காவல் நிலையங்கள் உள்ளன. காவலர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. புறக்காவல் நிலையத்திலும் போதிய காவலர்கள் இல்லை. ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். லாஸ்பேட்டை காவல் நிலையம், புறக்காவல் நிலைய பகுதிகளில் வழிப்பறி, செயின்பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.

முதல்வர்: கரையாம்புத்தூர், கரிக்காலம்பாக்கத்தில் புறக்காவல் நிலையம், அம்பகரத்தூர், தாகூர் கல்லூரி அருகே, மாஹே பகுதியில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுகின்றனர். அரசு கலைக்கல்லூரி அருகே புறக்காவல் நிலையம் உள்ளது. செயின்பறிப்பு, வழிப்பறி போன்றவை திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசில் இல்லை. ரௌடிகள் பிரச்னை தான் உள்ளது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.

பாஸ்கர்: ரிட்டயர்மெண்ட் ஆன ரௌடிகளை தான் தேடி வருகின்றனர். நடைமுறையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரௌடிகளை தேடுங்கள்.

அமைச்சர் நமச்சிவாயம்: அனைத்து ரௌடிகள் பட்டியலும் பாஸ்கர் எம்எல்ஏவுக்கு தெரியு்ம போல. பட்டியல் நாங்கள் ஏன் தர வேண்டும். ரௌடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.

முதல்வர்: நீங்கள் ரௌடிகள் பட்டியலை தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். புதுவையில் ரௌடிகள் நடமாட்டமே இல்லை. கடுமையாக செயல்படுவதால் தான் குற்றம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.