தமிழகத்தில் தீயணைப்புத் துறையில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேரிடர் காலத்தில் மக்களை காப்பதில் முதன்மையான அரசுத் துறையாக திகழ்வது தீயணைப்புத் துறை தான். தீ விபத்து, மழை வெள்ளம், இயற்கை பேரிடர்களில் தீயணைப்புத் துறையினர் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் 317 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இத்துறையில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், தற்போது 3,500 பணியாளர்களே உள்ளனர்.
பாதி அளவு பணியாளர்களே உள்ளதால், வேலைப் பளுவால் தீயணைப்புத்துறையினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக பணியாளர்கள் விடுப்பு எடுப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், இத்துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையாலும், பணி சுமையாலும், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் சென்று உதவி வரும் தீயணைப்பு துறை மீது அரசு கவனம் செலுத்தி, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என தீயணைப்புத் துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த துறைக்கு தேவையான உபகரணங்களை போதுமான அளவில் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்தில் வறட்சி நிலையை ஆராய்ந்து வருகிறேன்: முதல்வா் டி.கே. சிவகுமாா்
இந்தியாவின் ‘பால மனிதன்’ கிரீஷ்பரத்வாஜ் காலமானாா்!

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை

ஆலங்குளம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து: 27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




