சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறும் சட்டத்தை நிறைவேற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம்: அதிமுக வலியுறுத்தல் 

புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

ப. சுஜித்குமார்

புதுச்சேரி:  புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி சட்டம் இயற்ற வேண்டுமென அதிமுக வலியறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்,ஏ. திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரியில் உள்ள  தனியார் மருத்துவ  கல்லூரிகளில் அரசுக்கு  50 சதவீத இடங்களை  பெற சட்டம் இயற்றாமல் புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் கையூட்டு பெறுகிறது. மாணவர் நலனில் அக்கறையின்றி தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது.

நாளை அதிமுக பேரவை முற்றுகைப் போராட்டம்

காங்கிரஸ்}திமுக அரசின் செய்யப்படாத தன்மையை கண்டித்தும், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் இடங்களை பெற உரிய சட்டதிருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும், புதுச்சேரி அதிமுக சார்பில் வரும் 26 ஆம் தேதி (புதன்கிழமை) சட்டப்பேரவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். இதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநருக்கு அதிமுக அளிக்கும். இது தொடர்பாக சட்டப்பேரவை செயலகத்துக்கு கிரண்பேடி அறிவுறுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.