நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சசிகலா புஷ்பாவின் புகார்: அதிமுகவிடம் விளக்கம் கேட்குது தேர்தல் ஆணையம்! 

அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சசிகலா புஷ்பாவின் புகாருக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:54 am

PTI

புதுதில்லி: அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சசிகலா புஷ்பாவின் புகாருக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொது செயலலாளராக சசிகலா நடராசன் தேர்தெடுக்கப்பட்டார். அவரது நியமனம் சரியான முறையில் நடைபெறவில்லை என்றும், ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கோரி, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

அவரது இந்த புகாருக்குத்தான் விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் தற்போது கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இது தேர்தல்  ஆணையத்தின் 'நோட்டீஸ்; இல்லை என்பதால் இதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.