தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

Raghavendran

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தா. கார்த்திகேயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத் தேர்தலை ஏப்.12-ஆம் தேதி நடத்துவதற்கு அறிவிப்பு வெளியானது. பணப் பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடு புகார்களின் அடிப்படையில் ஏப்.7-ஆம் தேதி அத்தேர்தல் ரத்தானது. 

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரசாரம் டிசம்பர் 19-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து டிசம்பர் 21-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 

வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக போலிஸார், தொகுதி முழுவதும் ரோந்து வாகனங்களில் சுற்றி வந்தனர். வாக்குப் பதிவு 'வெப்' கேமரா மூலம் தேர்தல் ஆணைய அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

வாக்குப் பதிவு நிறைவடையும் மாலை 5 மணியை நெருங்கிய நிலையில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 5 மணிக்கு மேல் வந்த எந்த வாக்காளரும் வாக்குச் சாவடிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாக்குப் பதிவு இரவு 7.45 மணி வரை நீடித்தது.

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி தா. கார்த்திகேயன், வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாகவும், 77 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 14 மேஜைகளில் 19 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஓட்டு எண்ணும்போது அந்த எந்திரத்தில் பழுது ஏற்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவிபிஏடி எந்திரத்தில் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) உள்ள சீட்டுகள் எண்ணப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.