ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: வேட்பாளர்கள் சொன்னதும் சொல்ல மறந்ததும்; முழு அலசல்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 15ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்துக்களை குறைந்து மதிப்பிட்டு, பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை அவர் நன்கு ஆராய்ந்த பிறகே வேட்பாளர்களின் மனுவை ஏற்றிருக்க வேண்டும். இதனை செய்யத் தவறிய தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் சொத்து மதிப்புக்கும், உண்மையான சொத்து மதிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது என்பதுதான்.
அதாவது,
டிடிவி தினகரன் (அதிமுக அம்மா கட்சி வேட்பாளர்)
அளவு (சதுர அடி)
பிரமாணப்
பத்திரம்
மதுசூதனனின் (புரட்சித் தலைவி அம்மா அதிமுக வேட்பாளர் )
அளவு
(ஏக்கர்)
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் கல்வித் தகுதி
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 65% பேர் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்தவர்கள். 20% பேர் மட்டுமே பட்டதாரிகள்.
வேட்பாளர்களில் 44% பேர் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
குற்றவியல் பின்னணி
வேட்பாளர்களில் 7 பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தங்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தேமுதிக வேட்பாளர் மதிவாணன், சுயேட்சை வேட்பாளர் என். குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள்
வேட்பாளர்களில் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உட்பட 9 பேர் கோடீஸ்வரர்கள். ஆனால், இவர்களை எல்லாம் விட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் தான் அதிக சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
சொத்துப் பட்டியலில் பின்தங்கினாலும், அதிகக்கடன் மற்றும் வருமானம் கொண்ட வேட்பாளர் பட்டியலில் டிடிவி தினகரன் முதல் இடத்தில் உள்ளார்.
மிக மோசமான விஷயம் என்னவென்றால் 70 சதவீத வேட்பாளர்கள் தங்களது வருமானம் குறித்தும், 28% வேட்பாளர்கள் தங்கள் பான் எண் குறித்தும் பதிவு செய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...