நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: வேட்பாளர்கள் சொன்னதும் சொல்ல மறந்ததும்; முழு அலசல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 12:21 pm


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்து மதிப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 15ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் தங்களது சொத்துக்களை குறைந்து மதிப்பிட்டு, பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை அவர் நன்கு ஆராய்ந்த பிறகே வேட்பாளர்களின் மனுவை ஏற்றிருக்க வேண்டும். இதனை செய்யத் தவறிய தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கும் சொத்து மதிப்புக்கும், உண்மையான சொத்து மதிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது என்பதுதான்.

அதாவது,

டிடிவி தினகரன் (அதிமுக அம்மா கட்சி வேட்பாளர்)

இடம்

அளவு (சதுர அடி)

கட்டடம்

பிரமாணப்
பத்திரம்

சொத்தின் மதிப்புசந்தை மதிப்புவித்தியாசம்
மயிலாப்பூர்21210001.08 லட்சம்25.13 லட்சம்42.30 லட்சம்31.41 லட்சம்
அடையாறு872675001.13 கோடி5.26 கோடி13.98 கோடி12.85 கோடி
திண்டிவனம்244371130271.73 கோடி2.23 கோடி2.23கோடி50.06 கோடி
மொத்தம்-2.98 கோடி7.74 கோடி16.64 கோடி13.66 கோடி 


மதுசூதனனின் (புரட்சித் தலைவி அம்மா அதிமுக வேட்பாளர் )

இடம்

அளவு

(ஏக்கர்)

பிரமாணப் பத்திரம்சொத்து மதிப்புசந்தை மதிப்புவித்தியாசம்
ஆவடி3.1115 லட்சம்4.38 கோடி20.32 கோடி20.17 கோடி
திருவாலங்காடு3080 லட்சம்7.5 கோடி7.5 கோடி6.7 கோடி
கேகே நகர்840 சதுர அடி20 லட்சம்50.4 லட்சம்84 லட்சம்64 லட்சம்
கொட்டிவாக்கம்240 சதுரஅடி75 லட்சம்84 லட்சம்84 லட்சம்9 லட்சம்
மொத்தம் -1.9 கோடி13.22 கோடி29.50 கோடி27.6 கோடி

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் கல்வித் தகுதி
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 65% பேர் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படித்தவர்கள். 20% பேர் மட்டுமே பட்டதாரிகள்.

வேட்பாளர்களில் 44% பேர் 25-40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

குற்றவியல் பின்னணி
வேட்பாளர்களில் 7 பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தேமுதிக வேட்பாளர் மதிவாணன்,  சுயேட்சை வேட்பாளர் என். குணசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள்
வேட்பாளர்களில் டிடிவி தினகரன், புரட்சித் தலைவி அம்மா அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உட்பட 9 பேர் கோடீஸ்வரர்கள். ஆனால், இவர்களை எல்லாம் விட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் தான் அதிக சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

சொத்துப் பட்டியலில் பின்தங்கினாலும், அதிகக்கடன் மற்றும் வருமானம் கொண்ட வேட்பாளர் பட்டியலில் டிடிவி தினகரன் முதல் இடத்தில் உள்ளார்.

மிக மோசமான விஷயம் என்னவென்றால் 70 சதவீத வேட்பாளர்கள் தங்களது வருமானம் குறித்தும், 28% வேட்பாளர்கள் தங்கள் பான் எண் குறித்தும் பதிவு செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.