சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி 1950-ஐ தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி வ.மலர்க்கண்ணன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:34 pm

ப. சுஜித்குமார்


புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி 1950-ஐ தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி வ.மலர்க்கண்ணன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற மக்களின் துணையோடு தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடைமுறை அமுலில் இருக்கும் போது, பொது இடங்களில் கட்சி சார்ந்த சுவரொட்டிகள், பேனர்கள், கொடிகள் இருக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள் தந்து வாக்கு சேகரிக்கக்கூடாது.

காலை 6 மணிக்கு முன்போ அல்லது இரவு 10 மணிக்கு பின்போ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரி (கட்டுப்பாட்டு அறை) கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-லும், தேர்தல் நடத்தும் அதிகாரி-7, (கட்டுப்பாட்டு அறை) தொலைபேசி எண்.0413-2245100 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கும். மேலும் இ-மெயில் as-ro7.pon@nic.in, http://egov-election.pon.nic.in/theervu/ என்ற இணையதளத்திலும் புகார்களை பதிவு செய்யலாம்.
புகார்களை பெற்ற உடனே நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மலர்க்கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.