தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதா? அறிக்கை அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதா என்பது குறித்து நாளை பிற்பகலுக்குள் அளிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


புது தில்லி: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதா என்பது குறித்து நாளை பிற்பகலுக்குள் அளிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
காவிரி விவகாரம் இன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இது குறித்து நாளை பிற்பகல் 2 மணிக்குள் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...