மும்பையில் கன மழை: மேலும் மழை பெய்யும் என எச்சரிக்கை
மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


மும்பை: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கன மழை காரணமாக, இன்று காலை மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. எனினும், சாலைகளில் இதுவரை நீர் தேங்காததால், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...